கோயம்புத்தூரில் இந்த ஆண்டு வழக்கமான கோடை காலநிலையுடன் ஒப்பிடும்போது வெயில் கடுமையாக உள்ளது.
போக்குவரத்து சிக்னல்களில் வெயிலில் காத்திருக்கும் மக்களுக்கு நிழல் தரும் வகையில் புதுச்சேரி, திருச்சி போன்ற இடங்களில் தற்காலிக பசுமை வலை மேற்கூரைகள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
மாநகராட்சியும், கோவை காவல் துறையும் இணைந்து, போக்குவரத்து சிக்னல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பசுமை கூரைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இதற்கான முறையான நடைமுறைகள் குறித்து காவல் துறையுடன் ஆலோசித்து, மாநகராட்சி ஒப்புதல் அளித்தவுடன் செயல்படுத்தப்படும்.